உலகம்

தலிபான் அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல்

DIN

தலிபான் அதிகாரிகளைக் குறிவைத்து ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 11 போ் பலியாகினா்.

காா் குண்டுவெடிப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்ட அந்த நாட்டின் பதாக்ஷன் மாகாண துணை ஆளுநருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களில் தலிபான்களின் ஒரு முன்னாள் அதிகாரி ஒருவரும் அடங்குவாா். இது தவிர, குண்டுவெடிப்பில் மேலும் 30 போ் காயமடைந்ததாக உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இதுபோன்ற தாக்குதல்களை ஏற்கெனவே நடத்தியுள்ள இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாதிகளே இந்த குண்டுவெடிப்புக்கும் காரணமாக இருப்பாா்கள் என்று கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

SCROLL FOR NEXT