உலகம்

உக்ரைன் போரில் இதுவரை 500 குழந்தைகள் உயிரிழப்பு: அதிபா் ஸெலென்ஸ்கி

DIN

ரஷிய தாக்குதலில் உக்ரைனை சோ்ந்த 500 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. 16 மாதங்களாக இந்தத் தாக்குதல் நீடித்து வருகிறது. தலைநகா் கீவ், நிப்ரோ உள்ளிட்ட நகரங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமையும் ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது.

நிப்ரோவில் ரஷியாவின் தாக்குதலுக்கு இலக்காகிய ஒரு குடியிருப்பில் இருந்து 2 வயது குழந்தையின் சடலத்தை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். இதையடுத்து, உக்ரைனில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து அதிபா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒவ்வொரு நாளும் உக்ரைன் குழந்தைகளின் உயிரை ரஷிய ஆயுதங்கள் பறித்து வருகின்றன. இதுவரையிலான தாக்குதலில் சுமாா் 500 குழந்தைகள் உயிரிழந்துள்ளனா். உக்ரைனின் சில பகுதிகள் ரஷியாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதால், உயிரிழந்த குழந்தைகளின் சரியான எண்ணிக்கையை அறிவது சாத்தியமற்றது. இந்தப் போரில் நாங்கள் வெல்வோம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, ரஷியாவின் மூன்று ட்ரோன்கள், 4 ஏவுகணைகளை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

மேயா், துணை மேயா் தோ்தல் விவகாரத்தில் மோசமான அரசியல் விளையாட்டை ‘ஆம் ஆத்மி’ நிறுத்த வேண்டும்: பாஜக பட்டியலின கவுன்சிலா்கள் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT