உலகம்

பலிகளை மறைக்க மருத்துவர்களைக் கட்டாயப்படுத்தும் சீனா: தகவல்

ANI

பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கையை குறைவாகக் காட்ட, கரோனா தொடர்பான பலிகளை மறைக்குமாறு மருத்துவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக, எதேச்சதிகாரத்துக்கு எதிரான குரல்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அதற்கேற்ப, சுகாதார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளையும் சீன அரசு மாற்றியமைத்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்ல, கரோனாவால் மருத்துவமனைக்கு வெளியே பலியாகும் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக பதிவேற்றம் செய்வதையே சீனா நிறுத்திவிட்டதாகவும் அந்த தகவல் மேற்கோள்கோட்டியுள்ளது.

வெளி உலக அழுத்தம் காரணமாக, சீனா, கடந்த டிசம்பர் மாதம் கரோனாவுக்கு 60 ஆயிரம் பேர் வரை பலியானதாகத் தகவல் கொடுத்தது. ஆனால், அதற்கு முன்பு வரை கரோனா பேரிடர் தொடங்கியதிலிருந்து வெறும் ஐந்து ஆயிரத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருந்தது.

ஆனாலும், சீனா தற்போது தெரிவிக்கும் எண்ணிக்கையை விடவும், கரோனா பலி எண்ணிக்கை கடுமையாக அதிகமாக இருக்கும் என்றே அந்த அமைப்பு தெரிவிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT