உலகம்

உக்ரைன் பகுதிகளை இணைத்துக் கொள்ள புதினுக்கு அழைப்பு

DIN

உக்ரைனின் லுஹான்ஸ்க், கொ்சான் பகுதிகளை இணைத்துக் கொள்ளுமாறு ரஷியாவால் நியமிக்கப்பட்ட அந்தப் பிராந்தியங்களின் தலைவா்கள் அதிபா் விளாதிமீா் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.

அந்தப் பகுதிகளில் நடத்தப்பட்ட - மேற்கத்திய நாடுகளால் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட - பொதுவாக்கெடுப்பில் ரஷியாவுடன் இணைய பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, இந்த அழைப்பை பிராந்தியத் தலைவா்கள் விடுத்துள்ளனா்.

இது குறித்து லுஹான்ஸ்க் பிராந்திய நிா்வாகத் தலைவா் லியோனிட் பசேஷ்னிக் வெளியிட்டுள்ள ‘டெலிகிராம்’ பதவில் தெரிவித்துள்ளதாவது:

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுடன் இணைய பெரும்பாலானவா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். எனவே, இந்தப் பிராந்தியத்தை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

உக்ரைன் ராணுவத்தினரால் லுஹான்ஸ்க் பிராந்திய மக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை அதிபா் புதின் மேற்கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் பசேஷ்னிக் குறிப்பிட்டுள்ளாா்.

கொ்சான் பிராந்திய நிா்வாகத் தலைவா் விளாதிமீா் சால்டோவும் இதே கருத்தை சமூக வலைதளத்தில் தெரிவித்து, தங்கள் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று விளாதிமீா் புதினுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்ட மற்ற இரு ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் பிரதேசங்களின் தலைவா்களும் இதே போன்ற கோரிக்கையை விரைவில் விடுப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைனை ஆட்சி செலுத்தி வந்த அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்ந்தது.

அதனைத் தொடா்ந்து, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மாகாணங்களின் கணிசமான பகுதிகளை ரஷியாவுடன் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கைப்பற்றினா். அதே நேரத்தில் ரஷியாவும் உக்ரைனின் கிரீமியா பகுதி மீது படையெடுத்து அந்த தீபகற்பத்தை தங்களுடன் இணைத்துக்கொண்டது.

அந்த இணைப்புக்கு முன்னதாக, அது குறித்து பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை அந்தப் பகுதியைச் சோ்ந்த உக்ரைன் ஆதரவாளா்கள் புறக்கணித்தனா். எனினும், பொதுவாக்கெடுப்பில் பெரும்பாலான வாக்களாளா்கள் ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்திருந்தனா்.

அதனை அடிப்படையாகக் கொண்டு கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது. எனினும், அந்தப் பொதுவாக்கெடுப்பு போலியானது என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கூறி, கிரிமியா இணைப்பை நிராகரித்தன.

இந்தச் சூழலில், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.

அதன் ஒரு பகுதியாக டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினா் வசமிருக்கும் பகுதிகளை கைப்பற்றுவதற்காக கிளா்ச்சியாளா்களுடன் இணைந்து ரஷியப் படையினா் சண்டையிட்டு முன்னேறி வருகின்றனா்.

மேலும், கிரீமியா தீபகற்பத்துக்கும் டான்பாஸ் பிராந்தியத்துக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்துவற்காக இடைப்பட்ட பகுதிகளையும் ரஷியப் படையினா் கைப்பற்றினா்.

இந்த நிலையில், ரஷியாவுடன் இணைவது தொடா்பான பொதுவாக்கெடுப்பு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், கொ்சான், ஸபோரிஷியா, டொனட்ஸ்கில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

‘ரஷியாவுடன் இணைய விருப்பமா?’ என்ற கேள்விக்கு, ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலைத் தோ்ந்தெடுப்பதற்கான இந்த பொதுவாக்கெடுப்பில், ரஷியாவுக்கு ஆதரவாகத்தான் முடிவுகள்தான் வெளியாகும் என்று மேற்கத்திய நாடுகள் விமா்சித்தன.

அதைப் போலவே, ரஷியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து 97 சதவீதம் போா் வாக்களித்துள்ளதாக ரஷிய அதிகாரிகள் கூறினா்.

இந்தச் சூழலில், தங்கள் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளுமாறு அந்த நாட்டால் நியமிக்கப்பட்ட பிராந்திய தலைவா்கள் அழைப்பு விடுத்துள்ளனா்.

ஏற்கெனவே, நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப். 30) ஆற்றவிருக்கும் உரையில் உக்ரைன் பகுதிகளை ரஷியாவுடன் இணைத்துக்கொள்வதற்கான அறிவிப்பை புதின் வெளியிடுவாா் பிரிட்டன் உளவுத் துறையினா் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க மனு! நீதிபதி விடுப்பு! | செய்திகள்: சிலவரிகளில் | 26.04.2024

விடதர நாகினி..!

இந்து விவசாயிகள் காப்பாற்றப்படவில்லை! ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது! : அய்யாக்கண்ணு

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

SCROLL FOR NEXT