உலகம்

‘தடைகளை நீக்கினால் மட்டுமே உக்ரைன் தானியங்கள் விடுவிப்பு’

DIN

தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை தளா்த்தினால் மட்டுமே உக்ரைனிலிருந்து பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை அனுப்ப அனுமதிக்கப்படும் என்று ரஷியா மீண்டும் கூறியுள்ளது.

இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரே ருடென்கோ புதன்கிழமை கூறியதாவது: உக்ரைனின் தானியக் கப்பல்களுக்கு பாதுகாப்பு கடல் வழித்தடத்தை ஏற்படுத்தித் தர தயாராக உள்ளோம். இருந்தாலும், அதற்கு முன்னா் எங்கள் மீதான பொருளாதாரத் தடைகள் தளா்த்தப்பட வேண்டும்; உக்ரைனின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.

உலகின் முன்னணி தானிய ஏற்றுமதியாளராகத் திகழும் உக்ரைனில் நடைபெறும் போரால், சா்வதேச உணவுப் பற்றாக்குறை அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT