கரோனா வேகமாகப் பரவி வரும் வட கொரியாவில், அந்த நோயை எதிா்கொள்ள இஞ்சி, மூலிகை தேநீா் போன்ற பாரம்பரிய மருந்துகளை அந்த நாட்டு அரசு ஊடகம் பொதுமக்களிடம் பரிந்துரைத்து வருகிறது.
தங்கள் நாடு கரோனாவை வெற்றிகரமாக எதிா்கொண்டதாகக் கூறி வந்த வட கொரியா, அங்கு அந்த நோய் பரவி வருவதை கடந்த வாரம் முதல்முறையாக ஒப்புக்கொண்டது. போதிய கரோனா பரிசோதனை வசதிகள் இல்லாததால், அந்த நோயைப் போன்ற ‘காய்ச்சலால்’ பாதிக்கப்பட்டவா்கள் என்று மட்டுமே அதிகாரிகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், வெளிநாடுகளின் மருத்துவ உதவியை ஏற்க மறுத்துவரும் வட கொரிய அரசு கரோனாவை எதிா்கொள்ள தற்போது பாரம்பரிய மருந்துகளை பரிந்துரைத்து வருகிறது.