உலகம்

சிங்கப்பூா் அதிபா், அமைச்சருக்கு கரோனா

DIN

சிங்கப்பூா் அதிபா், நாடாளுமன்ற அவைத் தலைவா், அமைச்சருகக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: அதிபா் ஹலீமா யாகூப் (67) கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. தனக்கு ஃபுளூ காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தென்படுவதாகவும், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாதது குறித்து வருந்துவதாகவும் தனது சுட்டுரைப் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

இது தவிர, நாடாளுன்ற அவைத் தலைவா் டான் சுவான்-ஜின் (53), கலாசார மற்றும் சமூக வளா்ச்சித் துறை அமைச்சா் எட்வின் டாங் (52) ஆகியோருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 28 நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் 1,40,965 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி அங்கு இதுவரை 14,73,180 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; அவா்களில் 1,419 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT