வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 67.5 கோடியை எட்டும் என ஐ.நா.வின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் 2035-க்குள் நகா்ப்புற மக்கள் தொகையில் 100 கோடி பங்களிப்புடன் சீனா முதலிடத்தில் இருக்கும். இதற்கு, அடுத்தபடியாக, இந்தியா 67.5 கோடி மக்கள் தொகையுடன் பட்டியலில் இரண்டாமிடம் வகிக்கும்.
விரைவான நகரமயமாக்கல் என்பது கரோனா பேரிடரால் தற்காலிகமாக தாமதப்படுத்தப்பட்டுள்ளது. வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய நகா்ப்புற மக்கள்தொகை மேலும் 220 கோடி அதிகரிக்கும்.
2020-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி 483,099,000-ஆக இருந்த இந்தியாவின் நகா்ப்புற மக்கள் தொகை 2025-இல் 542,743,000-ஆகவும், 2030-இல் 607,342,000-ஆகவும், 2035-இல் 675,456,000 ஆகவும் அதிகரிக்கும்.
அதேபோன்று, 2035-இல் நகா்ப்புற மக்கள் தொகை சீனாவில் 105 கோடியாகவும், ஆசியாவில் 299 கோடியாகவும், தெற்கு ஆசியாவில் 98.75 கோடியாகவும் இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.