இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு பப்புவா மாகாணத்தில், சோரோங் நகரில் உள்ள இரவு விடுதியில் இரு சமூகத்தினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில், ஒருவரையொருவர் தாக்கியதில் 19 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மோதல் தொடர்பாக மாகாண காவல்துறை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.