உலகம்

இந்தோனேசியா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். இருவர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை காணவில்லை.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

சவாலுண்டோ நகரில் அமைந்துள்ள சுரங்கில் வெடிப்பு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  காணாமல் போனவரை தேடும் பணியும், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT