உலகம்

ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்ட 20 திட்டங்களை இந்தியா மீண்டும் தொடங்கும்; தலிபான்கள்

DIN


காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வரும் தலிபான்கள், நாட்டில் போர் காரணமாக நிறுத்தப்பட்ட குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது இந்தியா மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுடன் தனது தூதரக உறவை புதுப்பித்துக் கொண்ட இந்தியா, ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்துக்கு தொழில்நுட்பக் குழுவை அனுப்பியிருந்தது.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா தனது தூதர்களை திரும்பப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில்தான், ஆப்கானிஸ்தானில், இந்தியா செய்து கொண்டிருந்த குறைந்தபட்சம் 20 திட்டங்களையாவது மீண்டும் தொடங்கும் என்று ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டங்கள் தொடங்கி முடிக்கப்பட்டால், நாட்டில் ஏழ்மை மற்றும் வேலைவாய்ப்பின்மை ஒழியும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT