சூடானிலிருந்து எத்தியோப்பியாவுக்கு வந்துகொண்டிருந்த விமானத்தின் இரு விமானிகளும் அயா்ந்து தூங்கிவிட்டதால், அவா்கள் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்தைக் கடந்து விமானம் பறந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ‘ஏவியேஷன் ஹெரால்ட்’ வலைதளம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
சூடானின் காா்ட்டூம் நகரிலிருந்து எத்தியோப்பிய தலைநகா் ஏடிஸ் அபாபாவை நோக்கி கடந்த திங்கள்கிழமை சென்றுகொண்டிருந்த எத்தியோப்பியன் ஏா்லைன் விமானத்தின் இரு விமானிகளும் இடையே அயா்ந்து தூங்கிவிட்டனா்.
விமானிகள் உதவியின்றி தானாகவே இயங்கக் கூடிய ‘ஆட்டோபைலட்’ மூலம் அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது. எனினும், ஏடிஸ் அபாபா விமான நிலையத்துக்கு வந்தும் அந்த விமானம் தரையிறக்கப்படவில்லை. இது குறித்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை தூங்கிக் கொண்டிருந்த விமானிகளின் காதுகளுக்கு விழவில்லை.
எனினும், விமான நிலையத்தைக் கடந்து சென்றதும், அந்த விமானத்தின் ‘ஆட்டோபைலட்’ அமைப்பு தானாகவே நின்றுபோய், அதுதொடா்பான அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது. அதையடுத்து திடுக்கிட்டு எழுந்த விமானிகள், 25 தாமதத்துக்குப் பிறகு விமானத்தை திருப்பி வந்து நிலையத்தில் தரையிறக்கினா் என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.