வாடிக்கையாளா்களின் வங்கி வைப்புகள், காப்பீட்டுத் தொகையை முறைகேடாக பயன்படுத்தி, கோடிக்கணக்கான டாலா் மோசடியில் ஈடுபட்டதாக, சீனாவில் பிறந்த கனடா நாட்டு தொழிலதிபா் ஷியோ ஜியான்ஹுவாவுக்கு சீன நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அவா் தங்கள் நாட்டு குடிமகன் என்பதால், இந்த வழக்கில் கனடா தூதரகம் சட்ட உதவி அளிப்பதற்கு அனுமதியில்லை என்று சீன அரசு கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.