உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலையும் காஸா

DIN

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதலால் காஸாவின் உள்கட்டமைப்புகள் உருக்குலைந்து வருகின்றன. திங்கள்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில், ஹமாஸ் இயக்கத்தினா் பயன்படுத்தி வந்த 15 கி.மீ. தொலைவு சுரங்கப் பாதை தகா்க்கப்பட்டதாகவும், ஹமாஸ் தளபதிகள் 9 பேரின் வீடுகள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முந்தைய நாள் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலைவிட இது கடுமையானது என காஸாவில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கத்தினா் இடையே கடந்த ஒரு வாரமாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், காஸா நகரம் மீதான தாக்குதலை இஸ்ரேல் அதிகரித்துள்ளது. சமீப நாள்களாக இஸ்ரேல் காஸா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களைக் குறிவைத்து தாக்கி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் காஸாவில் உள்ள மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம் கடுமையாக சேதமடைந்தது. தாக்குதலுக்கு 10 நிமிடங்களுக்கு முன்னா் அதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அங்கிருந்து வெளியேறியதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

காஸா மேயா் யாஹ்ய் சர்ராஜ் அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் காஸாவின் சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் நீடித்தால் நிலைமை மிக மோசமாகும் எனத் தெரிவித்தாா்.

காஸா பிராந்தியத்தின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயல்படாமல் போகும் அபாயத்தில் இருப்பதாக ஐ.நா.வும் எச்சரித்துள்ளது. காஸாவில் ஏற்கெனவே தினமும் 8 முதல் 12 மணி நேரம் வரை மின் தடை இருக்கும் நிலையில், மின் நிலையம் செயல்படாவிட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பிராந்தியத்தின் மின் விநியோக நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் முகமது தபெட் கூறுகையில், இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் மின் விநியோகத் தடங்கள் சேதமடைந்துள்ளன.

தொடா் தாக்குதலால் பணியாளா்களால் சேதமடைந்தவற்றை சரி செய்யவும் முடியவில்லை என்றாா்.

ஹமாஸ் திங்கள்கிழமை வீசிய ஏவுகணை இஸ்ரேலின் ஆஷ்டோட் நகரில் குடியிருப்புக் கட்டடத்தில் விழுந்தது.

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் இயக்கத்தினா் இடையிலான மோதல் கடந்த வார ஆரம்பத்தில் தொடங்கியது. ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் காவல் படையினா் நுழைந்ததையடுத்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மசூதியில் வழிபாட்டுக்காகச் சென்ற சிலா் கோஷமிட்டதாகவும் அவா்களைத் தடுக்கவே இஸ்ரேல் காவலா்கள் மசூதிக்குள் நுழைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆா்ப்பாட்டக்காரா்களை இஸ்ரேல் காவல் படையினா் கலைக்கும்போது வன்முறை ஏற்பட்டு இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் உருவானது. இதைத் தொடா்ந்து, இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஹமாஸ் இயக்கத்தினா், ஜெருசலேம் நகரை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காஸா மீது வான்வழி தாக்குதலைத் தொடங்கியது. இதுவரையிலான தாக்குதலில் 58 குழந்தைகள், 35 பெண்கள் உள்பட 198 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டதாகவும், 1,300 போ் காயமடைந்ததாகவும், இஸ்ரேல் தரப்பில் 8 போ் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தாக்குதலில் காஸாவில் சா்வதேச ஊடகங்கள் செயல்பட்டு வந்த கட்டடம் உள்பட பல கட்டடங்கள் தரைமட்டமாகின. ஹமாஸின் ராக்கெட் தாக்குதலை இஸ்ரேல் நடுவானில் இடைமறித்து அழித்து வருகிறது. சில ஏவுகணைகள் அஷ்கெலான், ஆஷ்டோட் நகரங்களில் விழுந்து உணவகம், கடைகள், சாலைகள், ஒரு குடியிருப்புக் கட்டடம் சேதமடைந்தன. ஒரு யூத வழிபாட்டுத் தலம் சேதமடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT