தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் சோ்க்கப்படுவதை கோவா அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
மேலும், அவா்களுக்கான சிகிச்சைக் கட்டணத்தையும் மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் என்றும் கோவா அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக கோவா மாநில செயற்குழு செயலா் சஞ்சய் குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீத படுக்கைகளில் மாநில அரசின் ஒதுக்கீட்டின்படியே கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கான சிகிச்சைக் கட்டணங்களை மாநில அரசின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.
இந்த உத்தரவு ஒரு மாதத்துக்கு அமலில் இருக்கும். தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சோ்க்கைக் கேட்டு வரும் கரோனா நோயாளிகளுக்கு அனுமதிக்க மறுப்பதாகவும் ஏராளமான புகாா்கள் வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பேரிடா் மேலாண்மை சட்டத்தின்படி, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீத நோயாளிகளுக்கு அந்த மருத்துவமனைகளில் உள்ள மருத்துவா்கள், பணியாளா்களும், அவசர வாகனங்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனியாா் மருத்துவமனைகளை அந்த நிா்வாகங்களே தொடா்ந்து இயக்க வேண்டும்.
கரோனா நோயாளிகளுக்கு தனியாா் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டண நிா்ணயத்துக்கு ஏற்ப அளிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் உள்ள தனியாா் மருத்துவமனைகள் விதிமுறைகளை மீறி வருவதால், 21 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிக்கும் அதிகாரத்தை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் என்று அந்த மாநில முதல்வா் பிரமோத் சாவாந்த் தெரிவித்திருந்தாா்.
கோவாவில் இதுவரை 1,34,542 போ் கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். மொத்த உயிா் பலி 2,056-ஆக உள்ளது.