உலகம்

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 4,25,540 ஆனது

ANI

பிரேசிலில் கரோனா நோய்த் தொற்று கட்டுக்கடங்காமல் தினசரி பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. 

இன்றைய பாதிப்பு நிலவரத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது அதில், 

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 2,311 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,25,540 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் ஒரேநாளில் 72,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, மொத்தம் 15,28,2,705 பேர் இதுவரை நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இறப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது இடத்தை பிரேசில் பிடித்துள்ளது. நோய்த் தொற்றுகளின் புதிய அலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் விளைவாக பாதிப்பும், இறப்புகளும் அதிகரித்துள்ளன. நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் மருத்துவமனைகள் தத்தளித்து வருகின்றன. 

இதற்கிடையில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

SCROLL FOR NEXT