உலகம்

மலேசியாவில் ஒருமாத கால பொதுமுடக்கம் அறிவிப்பு

DIN

கரோனா தொற்று பரவல் காரணமாக மலேசியாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஒருமாதகால பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் மலேசியாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருமாத கால பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார். 

அதன்படி மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மத வழிபாட்டுத் தலங்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் இயங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையின் போது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் அமலாகும் இந்தப் பொதுமுடக்கமானது ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT