ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 10,253 பேருக்குத் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
புதிதாக 10,253 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,3,029 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 379 பேர் பலியானதை தொடர்ந்து, இதுவரை அந்நாட்டில் 89,473 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதித்த 3,922,246 பேர் இதுவரை நோயிலிருந்து மீண்டுள்ளனர்.