நியூஸிலாந்து அருகே ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டது.
முதலில் 7.4 மற்றும் 7.3 ரிக்டா் அளவு கொண்ட இரு நிலநடுக்கங்களைத் தொடா்ந்து, கொ்மாடிக் தீவுப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 8.1 அலகுகளாகப் பதிவானது. இதையடுத்து, தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நியூஸிலாந்து உள்ளிட்ட பகுதிகளில் கடலோரம் வசிக்கும் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.
எனினும், நிலநடுக்கத்தின் விளைவாகத் தோன்றிய அதிகபட்ச சுனாமி அலை மிகவும் குறைந்த உயரத்தில் கடந்து சென்றுவிட்டதாகவும் இனி சுனாமி அபாயம் இல்லை எனவும் அதிகாரிகள் அறிவித்தனா்.