ரஷியாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, அந்த நாட்டின் 4 முதுநிலை அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதன் மூலம், ரஷிய புலனாய்வுக் குழுவின் தலைவர் அலெக்ஸாண்டர் பாஸ்ட்ரிகின், அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் குழு தலைவர் இகர் கிராஸ்னோவ், தேசிய பாதுகாப்புப் படை தலைவர் விக்டர் ஸோலோடோவ், மத்திய சிறைத் துறைத் தலைவர் அலெக்ஸôண்டர் கலஷ்னிகோவ் ஆகிய அந்த 4 அதிகாரிகள் ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளுக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.