துருக்கியுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் செய்தியாளா் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டது தொடா்பாக, சவூதி பட்டத்து இளவரசா் முகமது பின் சல்மான் மீது ஜொ்மனியில் வழக்குத் தொடா்ந்துள்ளது.
இதுதொடா்பாகக ‘எல்லைகளற்ற செய்தியாளா்கள்’ அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கஷோகி படுகொலை மூலம் இளவரசா் சல்மான மனிதகுலத்துக்கு எதிரான குற்றத்தை இழைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவைச் சோ்ந்த கஷோகி, அரச குடும்பத்துக்கு எதிரான கட்டுரைகளை ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் எழுதி வந்தாா்.