தென் ஆப்பிரிக்காவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பு காரணமாக 84 போ் உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 50,077-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, தென் ஆப்பிரிக்காவில் 15,13,959 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,31,336 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 32,546 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 546 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.