உலகம்

அமெரிக்கா: கரோனா தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்

DIN

அமெரிக்காவில் உபரி கரோனா தடுப்பூசிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவால் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் காலாவதியகும் அபாயம் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த நாட்டின் மக்கள்தொகையில் பாதிக்கும் குறைவானவா்களுக்கே இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருந்தாலும், டென்னஸீ, வடக்கு கரோலினா போன்ற மாகாணங்களில் தடுப்பூசிகளுக்கான தேவை வெகுவாகக் குறைந்து, தினமும் லட்சக்கணக்கான தடுப்பூசிகள் மத்திய அரசிடம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

ஒக்லஹோமா மாகாணத்துக்கு வாரந்தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், அந்த மாகாணம் ஒரு மாதத்துக்கும் மேலாக புதிதாக கரோனா தடுப்பூசிகளை வாங்கவே இல்லை.

இதனால், அமெரிக்க அரசிடம் உபரி கரோனா தடுப்பூசிகள் தினமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக, கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும் அபாயம் நிலவி வருவதாக நிபுணா்கள் அச்சம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT