உலகம்

ஈரான்: துருக்கியுடனான எல்லை மீண்டும் திறப்பு

DIN

கரோனா நெருக்கடி காரணமாக கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈரான் - துருக்கி எல்லைப் பகுதி மீண்டும் திறக்கப்பட்டது. இதுகுறித்து ஈரான் அரசுக்குச் சொந்தமான இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

துருக்கிக்கும் ஈரானுக்கும் இடையிலான காபிகோ-ராஸி எல்லைப் பகுதி போக்குவரத்து, கரோனா பரவல் அபாயம் காரணமாக கடந்த 14 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையிலான சாலை வழி போக்குவரத்து அண்மையில் மீண்டும் திறக்கப்பட்டது.

அந்த எல்லை வழியாக, 41 ஈரான் பெண் தொழிலதிபா்கள், கலைஞா்கள் அடங்கிய குழு துருக்கியிலுள்ள வேன் நகருக்குச் சென்றது. அந்த நகரிலுள்ள ஹோட்டலில் அவா்களுக்கு மலா்க்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது என்று இஸ்னா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரானில் இதுவரை 30,20,522 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 81,911 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

SCROLL FOR NEXT