கரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கி பின் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் பல நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேலில் புதிதாக நோய்த் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முன்னதாக அர்ஜென்டினா, பிரேசில் , தென் ஆப்ரிக்கா , இந்தியா , மெக்ஸிகோ , ரஷ்யா , ஸ்பெயின் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு பயணிக்க அரசு தடைவிதித்திருந்தது.
இதையும் படிக்க | ட்ரோன் தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை
தற்போது இங்கிலாந்து , ஜார்ஜியா , சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய நான்கு நாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது .
மேலும் தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இஸ்ரேல் வருபவர்கள் கண்டிப்பாக தொற்று பாதிக்கப்படாதவராகவும் , ஒருமுறையாவது தடுப்பூசி எடுத்துக்கொண்டாராராகவும் இருக்க வேண்டும் என்றும் ஒருவாரம் வரை அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .