நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் " பாணிபாங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேடேகோகு கிராமத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் மாயம் எனக் கூறியதோடு , சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | புகைப்படக்காரர் தானிஷ் சித்திகி கொலை? அதிர்ச்சி தகவல்
பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் மீதும் ராணுவத்தினரின் மீதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .