உலகம்

தடுப்பூசி செலுத்தவில்லையா? பணியாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பாகிஸ்தான் ரயில்வே

DIN

பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் என அந்நாட்டு ரயில்வேதுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் பாகிஸ்தானில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் தவிர்த்துவரும் ரயில்வே பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைப்பதற்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத பணியாளர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்வே பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப்படுத்த மண்டல அலுவலகங்களுக்கு சுற்றறிக்கையை அந்நாட்டின் ரயில்வே துறை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT