உலகம்

இரண்டாவது கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!

DIN

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் தற்போது வரை கரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து இன்று தேசிய சுகாதார நிறுவனத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி அவருக்கு செலுத்தப்பட்டது. 

உங்களது முறை வரும்போது தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக அமெரிக்காவில் பொறுப்பேற்றுள்ள பைடன் நிர்வாகம் 100 நாள்களில் 100 மில்லியன் (10 கோடி) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT