உலகம்

பைடன் நிர்வாகத்தில்  மேலும் சில முக்கிய பொறுப்புகளில் இந்திய அமெரிக்கர்கள் நியமனம்

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் மேலும் சில இந்திய அமெரிக்கர்கள் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் கடந்த 20}ஆம் தேதி பதவியேற்றனர். பைடன் பதவியேற்புக்கு முன்னரே வெள்ளை மாளிகை உள்பட பல்வேறு முக்கியமான பொறுப்புகளில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 20 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில இந்திய அமெரிக்கர்களுக்கும் முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க எரிசக்தி துறைத் தலைவராக தரக் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல் அலுவலக தலைவராக தன்யா தாஸ், பொது ஆலோசனை அலுவலக சட்ட ஆலோசகராக நாராயண் சுப்ரமணியன், புதைபடிவ எரிசக்தி அலுவலகத்தின் தலைவராக சுச்சி தலாட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் செயல் தலைவராக தேவ் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT