நேபாளத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,001-ஆக உயா்ந்துள்ளது.
மேலும் 270 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாட்டின் கரோனா பாதிப்பு 2,69,450 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.