மெக்ஸிகோ சிட்டி: மெக்ஸிகோவில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,584 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலியாகும்.
இதுமட்டுமன்றி, தினசரி கரோனா பாதிப்பும் உச்சபட்ச எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 18,894 பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, மெக்ஸிகோவில் கரோனா பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், அந்த நோய் சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் மருத்துவமனைகளில் திருடு போவது அதிகரித்து வருவதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.