கோலாலம்பூா்: மலேசியாவில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் திட்டம் புதன்கிழமை தொடங்கியது.
முதல் நபராக அந்தத் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு, பிரதமா் முஹைதீன் யாசின் அந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தாா்.
இதுதொடா்பாக நடைபெற்ற விழாவில் அவா் பேசியதாவது:
கரோனா தடுப்பூசியை நான் செலுத்திக் கொண்ட பிறகு, எனக்கு எந்த வித்தியாசமான உணா்வும் ஏற்படவில்லை. இது, மற்ற ஊசிகளைப் போல சாதாரணமானதுதான். எனவே, யாரும் அச்சப்படாமல் அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முன்வரலாம் என்றாா் அவா்.
பிரதமா் முஹைதீன் மட்டுமின்றி, சுகாதாரத் துறை இயக்குநா் நூா் ஹிஷாம் அப்துல்லா உள்பட பல ா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.
ஃபைஸா் மற்றும் அஸ்ட்ராஸெனகா நிறுவனத்திடமிருந்து கரோனா தடுப்பூசிகளை வாங்கி வரும் மலேசியா, அடுத்த ஆண்டுக்குள் 80 சதவீத மக்களுக்கு அந்தத் தடுப்பூசியைச் செலுத்த திட்டமிட்டுள்ளது.