தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,310 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,02,865-ஆக உயா்ந்துள்ளது.
அதுமட்டுமன்றி, அந்த நோய் பாதிப்பால் மேலும் 139 போ் பலியாகினா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25,006-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமை நிலவரப்படி, ருமேனியாவில் கரானாவால் பாதிக்கப்பட்ட 9,02,239 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 75,620 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவா்களில் 1,492 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.