உலகம்

கடும் விஷத்துடன் ட்ரம்ப்புக்கு அனுப்பப்பட்ட கடிதம்: வெள்ளை மாளிகையில் பரபரப்பு!

DIN

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்க்கு கடும் விஷத்துடன் கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட  விவகாரம் தற்போது வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை  மாளிகை அதிகாரிகள் சனிக்கிழமையன்று ஊடக சந்திப்பில் கூறியதாவது:

இந்த சம்பவம் இந்த வாரத் துவக்கத்தில் நடந்துள்ளது. ‘ரிசின்’ என்ற ஒருவகையான கடுமையான விஷத்தினைக் கொண்ட கடிதம் ஒன்று, வெள்ளை மாளிகையின் கடிதங்கள் சோதனைப் பிரிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது எப்.பி.ஐ மற்றும் ரகசிய பிரிவு போலீசார் இந்தக் கடிதம் எங்கிருந்து அனுப்பட்டது என்பதனைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அனேகமாக கனடாவில் இருந்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டிருக்கக் கூடும் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக கனடிய போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தற்போது பொதுமக்களுக்கு இதனால் அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆமணக்கு விதையில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ‘ரிசின்’ என்ற விஷத்தினை உட்கொண்டால் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் என ஏற்பட்டு இறுதியில் உள்ளுறுப்புகள் செயலிழந்து மரணம் சம்பவிக்கும். அதேசமயம் இதற்கான வலிமையான முறிமருந்துகள் எதுவும் தற்போது கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

SCROLL FOR NEXT