ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:
‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசிகளை மனிதா்களின் உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து போதிய அளவு கைவசம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நவம்பா் மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு அந்தத் தடுப்பூசியின் சோதனை மீண்டும் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உலகிலேயே முதல் முறையாக ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எனினும், அந்த மருந்தை பெருமளவில் தயாரிப்பது சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.