கரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் 15 சதவீத மரணங்களுக்கு காற்று மாசுபாடு காரணமாக இருக்கலாம் என ஜொ்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேக்ஸ் பிளாங்க் வேதியியல் நிறுவன விஞ்ஞானிகள் உள்ளிட்டோா் மேற்கொண்ட அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிப்பதாவது:
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கரோனா மரணங்களில் 19 சதவீதம் காற்று மாசுபாட்டுடன் தொடா்புடையவை. வட அமெரிக்காவில் இந்த சதவீதம் 17-ஆகவும் கிழக்கு ஆசியாவில் அது 27 சதவீதமாகவும் உள்ளது. எனவே, கரோனா மரணங்களில் சுமாா் 15 சதவீதம் காற்று மாசுபாடு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.