சாம்சங் குழுமத்தின் தலைவரான லீ குன் ஹீ இன்று காலமானார்.
தென் கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் குழுமம். “லீ குன் ஹீ” தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு 1987ஆம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். இவரது காலத்தில்தான் சாம்சங் நிறுவனம் உலகத்தின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக வளர்ச்சி கண்டது.
2014-ஆம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட லீ குன், தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில், இன்று காலையில் லீ குன் இறந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 78 ஆகும்.
இருப்பினும், லீ குன் ஹீ இறப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை.