ஜெர்மனி சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.
ஜெர்மனி நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
கரோனா அறிகுறிகளுடன் அவர் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஸ்பானுக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.