கரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கிய பிறகு, அதனை பொதுமக்களுக்கு செலுத்துவதற்குத் தேவையான 52 கோடி ‘சிரிஞ்சு’களை வாங்கி இருப்பு வைக்க ஐ.நா.வின் யூனிசெஃப் அமைப்பு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான மருந்துகள் பரிசோதனைக் கட்டத்தைத் தண்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, அதனை உலகம் முழுவதும் பரவலாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்குத் தேவையான 100 கோடி சிரிஞ்ச்களை வாங்கி முன்கூட்டியே சேமித்துவைகக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது 52 கோடி சிரிஞ்சுகள் வாங்கப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.