உலகம்

பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரேநாளில் 3000 பேருக்கு பாதிப்பு

DIN

பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தொற்று பாதிப்பை திறன்பட கையாண்ட பாகிஸ்தான் தற்போது திணறி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 3,009 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இது ஜூலை மாதத்துக்கு பிறகு ஒருநாளில் பதிவான அதிக பாதிப்பாகும். இதையடுத்து தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,82,892ஆக உயர்ந்துள்ளது. 
அதில் அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 1,16,506 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 59 பேர் பலியானார்கள். இதன்மூலம் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,803ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT