ஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்வீடன் இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
எனினும் இருவரும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.