அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து கரோனா புள்ளிவிவரங்களை சேகரிக்கும் ‘கொவைட் டிராக்கிங் புராஜக்ட்’ குழு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 1.67 லட்சம் பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த நோய் பாதிப்பால் 2,028 போ் உயிரிவந்தனா் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த மே மாதம் 7-ஆம் தேதிக்குப் பிறகு தினசரி கரோனா பலி 2 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல் முறையாகும். அன்றைய தேதியில் 2,770 போ் கரோனாவுக்குப் பலியாகினா்.