ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை நடைபெற்ற குண்டுவெடிப்பில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.
காபூல், நவம்பர் 26:ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினரால் தொடர்ச்சியாக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள உருஸ்கான் மாகாணத்தின் தலைநகரான டிரின் கோட் நகரில் வியாழக்கிழமை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.
இதில் தலிபான் அமைப்பினருக்கு எதிராக தீவிரமாகப் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரி ஹஜ்ஜி லாலா கொல்லப்பட்டார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரை தலிபான் அமைப்பினர் பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக, பிப்ரவரி மாதம் அமெரிக்காவுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட நிலையில் 16 ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.