கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தொடர்பாக எச்சரிக்கப்பட்ட போதிலும் அமெரிக்காவில் வழக்கம்போல மக்கள் விமானப் பயணங்களை மேற்கொண்டுவருகின்றனர்.
கலிபோர்னியாவில் ஆக்லாந்து விமான நிலையத்தில் வழக்கம்போலவே பயணிகள் சென்றுவந்துகொண்டிருக்கின்றனர்.
நன்றி கூறும் நிகழ்வுகளுக்காக வெளியூர்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மக்கள் திரள வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டபோதிலும் மக்கள் கேட்பதாக இல்லை.
வார இறுதியில் சராசரியாக ஒரு நாளில் 10 லட்சம் பேர் வரை விமானங்களில் பயணம் செய்துள்ளனர்.
கரோனாவைப் பொருட்படுத்தாத இந்த விமானப் பயணிகளின் கூட்டம் வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.