ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் சனிக்கிழமை தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 2 காவலர்களும், பொதுமக்களில் ஒருவரும் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தின் சுங்க அலுவலகத்தில் சனிக்கிழமை தலிபான்கள் சனிக்கிழமை தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்தத் தாக்குதலில் காவல் அதிகாரிகள் இருவரும், பொதுமக்களில் ஒருவரும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.