பாகிஸ்தானில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ளது பிர்வதாய் பேருந்துநிலையம். இங்கு நிறுவத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றில் இன்று திடீரென குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். 7 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஹோலி குடும்ப மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.