மாஸ்கோ: ரஷ்யாவில் நதியில் மூழ்கி தமிழக மாணவர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் பெரிய நகரான வோல்கோகிராட்டில் உள்ள வோல்கா நதியில் மூழ்கி தமிழகத்தை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்ததுள்ளாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் நால்வரும் மருத்துவ படிப்புக்காக ரஷ்யா சென்றவர்கள் என்பதும், பெரம்பூரை சேர்ந்த மாணவர் ஒருவர் உட்பட மொத்தம் 4 பேர் நதியில் மூழ்கி பலியாகியுள்ளனர் என்று தெரிகிறது.
காவல்துறை தனது விசாரனையைத் தொடர்ந்து வருகிறது.