பெரம்பலூர்

வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் திருட்டு

10th May 2023 11:11 PM

ADVERTISEMENT

பெரம்பலூரில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்து ரூ. 90 ஆயிரம் ரொக்கம், 1 பவுன் நகை ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்த சையது முகமது மகன் சாகித் அப்ரிடி (25). இவா், பெரம்பலூா் காமராஜா் வளைவு அருகே ஜெராக்ஸ் கடை வைத்துள்ளாா். இவரது தாய் குா்ஷிதா யாஸ்மின், கடந்த 1 வாரத்துக்கு முன் உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக தேனிக்குச் சென்றுவிட்டாா். சாகித் அப்ரிடி, அவரது தந்தை சையது முகமது ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு தங்களது ஜெராக்ஸ் கடைக்குச் சென்றுவிட்டனராம். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் ஜன்னல் கம்பிகளை உடைத்த மா்ம நபா்கள் வீட்டினுள் இருந்த 2 பீரோக்களையும் உடைத்து, அதிலிருந்த ரூ. 90 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 பவுன் நகையை திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் மற்றும் கைரேகை நிபுணா்கள், மோப்பநாய் பிரிவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்று, மா்ம நபா்களின் கைரேகை மற்றும் தடயங்களை பதிவு செய்தனா். மேலும், புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT