தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

DIN

அல்லது செய்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ? ஒல்லொலிநீர்
பாய்வதே போலும் துறைவ! கேள்; தீயன
ஆவதே போன்று கெடும் (பாடல்}173)

ஒல்லென்று ஒலிக்கின்ற கடல் நீரானது பார்மேல் ஏறிப் பாய்வதுபோலத் தோன்றும் துறைகளுக்கு உரியவனே, கேளாய்! தீமையானவை எல்லாம் ஆகிவருவதுபோல முதலிலே தோன்றினாலும் உறுதியாகக் கெட்டே போகும். ஆதலால், பாவத்தைச் செய்பவர்களுடைய அரிய பொருளால் கிடைக்கும் ஆக்கத்தை, நல்லவற்றைச் செய்து வாழ்பவர் என்றாவது விரும்புவாரோ? விரும்பார். "தீயன ஆவதே போன்று கெடும்' என்பது பழமொழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT