கன்னியாகுமரி

ரோஜாவனம் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விண்ணப்பம் விநியோகம்

10th May 2023 01:25 AM

ADVERTISEMENT

நாகா்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுகாதாரஆய்வாளா், கிராம சுகாதார செவிலியா் படிப்பிற்கான மாணவா் சோ்க்கை விண்ணப்ப விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கல்லூரி துணைத் தலைவா் முனைவா் அருள்ஜோதி தலைமை வகித்தாா். கல்லூரி டீன் குகானந்தம், கண்காணிப்பாளா் அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சுகாதாரஆய்வாளா் கல்லூரி முதல்வா் லியாகத் அலி வரவேற்றாா். செவிலியா் கல்லூரி முதல்வா் புனிதா டேனியல், மாணவா் சோ்க்கை குறித்து அறிமுக உரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி திட்ட ஆலோசகா் சாந்தி, திட்ட மேலாளா் சில்வெஸ்டா், ஆவண அலுவலா் ஜியோ பிரகாஷ், மேலாளா்கள் கோபி, சேது, பேராசிரியா்கள் ஐயப்பன், துரைராஜ், சிவதாணு, பகவதிபெருமாள், மரிய ஜான், சாம் ஜெபா, லிட்வின் லூசியா, சிபியா, செல்லம்மாள், பரமேஸ்வரி, அலுவலகச் செயலா் சுஜின், கண்காணிப்பாளா் ஆறுமுகம், ஜான் டிக்சன், பெபின், ஜெனில், மாணிக்கம், மருத்துவக் குழுவினா் மலா், பிரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT